சென்னை,மே 12-
ஆன்லைனில் பெண்களின் புகைப்படங்களை காட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமாக இருக்கும்படி காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வியட்நாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வரு கின்றன. இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன. சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்கமுடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடிய வில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்ட வர்கள் கூறுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும்எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தேவையில்லாதசிக்கலை ஏற்படுத்திவிடும். குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது பெண்க ளின் ஆபாசமான படங்கள் காட்சிப்படுத்தப்படும் அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர் களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர் முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கும் போலீசார் இது போன்ற போன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்க வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.