மயிலாடுதுறை, ஜூன் 6-
மயிலாடுதுறை அருகேயுள்ள பெரம்பூர் காவல் நிலைய பழைய கட்டடம் சேதமடைந்ததையடுத்து கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு காவலர்குடியிருப்புப் பகுதிக்கு காவல் நிலையம் மாற்றப்பட்டது.
தற்போது பழைய கட்டடம் இருந்த பகுதியில் ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடப்பட்டது. புதிய காவல் நிலைய கட்டடத்தை சென்னை யில் இருந்து காணொலிகாட்சி வாயிலாக டிஜிபி சைலேந்திரபாபு திறந்துவைத்தார். தொடர்ந்து பெரம்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மயிலாடு துறை காவல்கண்காணிப்பாளர் குத்துவிளக்கேற்றி காவல்நிலை யத்தை பயன்பாட்டிற்கு ஒப்ப டைத்தார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் கலைக்கதி ரவன், சஞ்ஜீவ்குமார், காவல் ஆய் வாளர்கள் சதீஷ்குமார், சந்திரா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், மாவட்ட ஊரா ட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.