districts

img

மாயமான பள்ளி மாணவர் செப்டிக்டேங்க் தொட்டியில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

அரியலூர், நவ.23 - ஜெயங்கொண்டம் அருகே மாய மான 10 - ஆம் வகுப்பு மாணவன்  செப்டிக் டேங்க் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள கீழக்குடி யிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (48). இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது இளையமகன் சந்தோஷ் (15) ஜெயங்கொண்டம் விருத்தா சலம் ரோட்டில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பள்ளி முடிந்து இரவு வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை. மணிகண்டன் தனது மகன் சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில்,  ஜெயங் கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவன் சந்தோஷை தேடி வந்தனர்.   இந்நிலையில் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த விருத்தகிரி என்பவர் ஜெயங் கொண்டம் விருத்தாசலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் புதுத்தெரு வில் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பின்புறம் செப்டிக் டேங்க் தொட்டி கட்டப்பட்டிருந்தது. இங்கு துர்நாற்றம் வீசியதாக கூறப் படுகிறது. சந்தோஷின் தந்தை டேங்க் அருகே சென்று பார்த்தபோது மழை தண்ணீரில் சடலம்  மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தெரிவித்தார்.  தீயணைப்புத்துறையினர் வர வழைக்கப்பட்டு, மாணவரின் சடலம்  மீட்கப்பட்டது. இறந்தது சந்தோஷ் என்பது அவரது தந்தை மணிகண்டன் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் பிரேதப்பரிசோத னைக்காக மாணவரின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.