அருமனை ,ஜன.10- அருமனை அருகே குழிச்சல் அழகல்பகுதியில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னால் அருமனை மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பத்தில் வாகனம் மோதி சுக்கு நூறாக உடைந்து போனது. இதனை அறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் அப்பகு தியில் சென்று பார்வையிட்டு விசாரித்தார்கள் மின்கம் பத்தில் மோதிய வாகனம் குறித்து பொதுமக்களுக்கு தெரியவில்லை. பின்னர் மின்சார வாரிய ஊழியர் கள் அருமனை இளநிலை மின் பொறியாளருக்கு தக வல் தெரிவித்து அதன் பிறகு அந்த மின்கம்பத்தை கயிற் றில் கட்டி தொங்கவிட்டுள்ள னர். இந்தப் பகுதியை சார்ந்த வர்கள் மின்கம்பத்தை மாற்றுமாறு மின்சார வாரி யத்திடம் பலமுறை முறை யிட்டும் மின்சார வாரிய அதி காரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மக்கள் உயிரைப் பற்றியும் கவலைப்படவில்லை. மின் கம்பம் கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும்.மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அருமனை மின்சார வாரி யத்திற்கு உட்பட்ட காரோடு அருகே இதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் புல் அறுப்பதற்கு சென்ற போது 5நாட்களாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித் ததில் இறந்து போன சம்ப வம் இப்பகுதியை பெரிதும் சோகத்தில் மூழ்கச் செய்தது. மின்சார வாரியத்தின் செயல்பாடு குறித்து அப் பகுதி மக்கள் கூறும் போது மின்சார வாரியத்தில் இருந்து வந்து மோதிய வாகனத்தை தெரியுமா என்று கேட்டார்கள். இரவு நேரத்தில் சம்பவம் நடந்த தால் நாங்கள் யாரும் பார்க்கவில்லை ஆகையால் தெரியாது என்று கூறினோம். இதனை காரணம் காட்டி அருமனை மின்சார வாரிய பொறியாளர் கடந்த நான்கு மாதங்களாக இந்த மின்கம் பத்தை மாற்றாத நிலையும் கயிற்றில் கட்டி தொங்க விட்டிருக்கும் காட்சியும் எங்கள் பகுதி மக்களை பீதி யடைய செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை உட னடியாக மாற்ற வேண்டும் மக்களின் உயிர்களை துச்ச மாக நினைத்து இத்தனை நாள் காலம் கடத்திய அதி காரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள னர்.