மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஞாயிறன்று நடைப்பெற்றது. போட்டியை ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெ. தமிழ் ஒளி மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லா, செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் நந்தினி, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுண சங்கரி தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.