திருவாரூர், ஜூன் 29-
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திட்டக்குழுத் துணைத்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலை வாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத் திட்டக்குழு உறுப் பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று கடந்த 24ஆம் தேதி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் போட்டியிட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் திமுக 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ,அதிமுக தலா 1 இடங்கள் என மொத்தம் 10 உறுப்பினர் களும், திருவாரூர் நகராட்சிக்கும், நீடா மங்கலம் பேரூராட்சி பகுதிக்கும் திமுக வேட்பாளர்கள் 2 பேர் என மொத்தம் 12 பேர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
எதிர்த்து வேட்பு மனு தாக்கல் யாரும் செய்ததால், அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து தேர் தல் நடத்தும் அலுவலர் சித்ரா வெற்றி சான்றி தழை வழங்கினார்.
இதையடுத்து திட்டக்குழு தலைவ ராக மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பால சுப்ரமணியன், மற்றும் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் திருவாரூர் நக ராட்சி, நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உறுப்பினர்களும் பொறுப்பு ஏற்று கொண்ட னர். கூட்டத்தில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) சந்திரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செளந்தர்யா, மாவட்ட ஊராட்சி செயலர் சந்தானம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் பேசு கையில், மாவட்ட திட்டக்குழுவில் உறுப்பி னர்களாக பொறுப்பேற்றுள்ள அனை வரும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பணி யாற்ற வேண்டும். விவசாயம் சார்ந்த மாவட் டம் மட்டுமின்றி முதல்-அமைச்சரின் மாவட் டமாகவும் இருப்பதால் அரசின் அனைத்துத் துறைப் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டு இந்த திட்டங்களை மக்க ளிடம் கொண்டு சேர்ப்பதற்கு பணியாற்ற வேண்டும் என்றார்.