districts

வாகனங்கள் மூலம் நேரடியாக காய்கறி, பழங்களை விற்க திட்டம் : 40 சதவீத மானியம் வழங்கல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 8 - விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடுதோறும் வழங்கிட ஏதுவாக ‘பண்ணையில் இருந்து வீட்டிற்கு’ என்ற புதிய திட்டம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் கிராமப்புற விவசாய இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தினை ஊக்கு விக்கும் பொருட்டு நடமாடும் வாகனங்கள் வாங்குவ தற்காக 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதியு தவி அரசு மூலம் வழங்கப்படும். திருச்சி மாநகராட்சியில் 6  நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள்  விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடமா டும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கு விற்பனை விலை அருகிலுள்ள உழவர்  சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.  இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்கு வதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவி லான கண்காணிப்புக் குழு மூலம் தெரிவு செய்யப்படுவர். இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை மாவட்ட துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), மன்னார்புரம், திருச்சி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 11.3.2022-க்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும் விவரங்களுக்கு திருச்சி அலுவலக தொலை பேசி எண்: 0431-2422142 மூலம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்)  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கே.கே.நகர், அண்ணாநகர் உழவர் சந்தை அலுவ லர்களை நேரடியாக தொடர்பு கொண்டும் பயன் அடை யலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரி வித்துள்ளார்.