ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை பாபநாசம், செப்.9 - பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேடுதல் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிக்கு ஆளுநர் ரவி இடம் அளிக்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு: “பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (சிண்டிகேட்) உறுப்பி னர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுந ரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே இருப்பது, தற்போது கடைப் பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை யாகும். தமிழ்நாட்டின் 3 பல்கலைக்கழ கங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்ய தற்போது ஆளுநர் நியமித்துள்ள தேடுதல் குழுவில் வெளிமாநில நபர்கள் இடம் பெற்றுள் ளனர். சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிக்கு ஆளுநர் ரவி இடம் அளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள இரண்டு நபர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களா கவும், ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழகத் துணைவேந்தர் தேடு தல் குழு ஒருங்கிணைப்பாளராக யுஜிசி பிரதிநிதியான சுஷ்மா யாதவை ஆளுநர் நியமித்திருப்பது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. மேலும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழகம் ஆகிய இரு பல்கலைக் கழகங்களில் தேடுதல் குழுக்களில் எச்.சி.எஸ் ரத்தோர் என்ற பீகார் மாநிலத்தவர் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பு கிறது. பல்கலைக்கழக மானிய ஆணைய (யுஜிசி) விதிகளின்படி, மாநில பல் கலைக்கழகத்திற்குத் துணை வேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரைச் சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதி முறை இல்லை. பல்கலைக்கழகத் துணைவேந் தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு முன்னரே கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந் தது. அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப் பட வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளி யிட்டது மரபு மற்றும் விதிகளுக்கு முர ணானது. உயர்கல்வியில் மாநிலத் தின் உரிமையைப் பறிக்கும் செய லாக ஆளுநரின் நடவடிக்கை அமைந் துள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரை களை கவனத்தில் கொள்ளாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் உரிமைகளைப் பறிக் கும் எதேச்சதிகாரப் போக்கோடு ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வரு வதற்குக் கடும் கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.