விருதுநகர், மே 11-
அருப்புக்கோட்டை அருகே பன்னிக் குண்டு கண்மாயில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதித்து வருவாய்த்துறை யினர் ஊன்றிய கற்தூண்களை தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் அகற்றி வாக னங்களை இயக்கியதால் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே பன்னிக் குண்டு கண்மாயில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் உத்தரவை மீறி தனியார் கல்குவாரி நிறுவனம் சாலை அமைத்து கனரக வாகனங்களை இயக்கி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த திங்கள் கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தி னர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை துணை வட்டாட்சியர், வட்டர வளர்ச்சி அலு வலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். முடிவில், கண்மாய் கரையிலும், நீர் வரத்து ஓடையிலும் கனரக வாகனங்கள் செல்லாத வகையில் பெரிய கற்தூண்களை ஊன்ற முடிவு செய்தனர். அதன்படி கற் தூண்களை ஊன்றினர்.
இந்த நிலையில், தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் அடியாட்களை வைத்து கற்தூண்களை இரவோடு இரவாக அகற்றி யுள்ளனர். பின்னர் புதனன்று காலை மீண்டும் கண்மாய் கரையில் கனரக வாக னங்களை இயக்கியுள்ளனர். இதை யடுத்து, பொது மக்கள் மீண்டும் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கல்குவாரி நிர்வாகத்தினர் பொது மக்களை அடி யாட்களை வைத்து மிரட்டியுள்ளனர். இதை யடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவை மீறி கனரக வாகனங்களை கண்மாயில் இயக்கக் கூடாது எனத் தெரிவித்தனர். இதையடுத்து கல்குவாரி வாகனங்கள் திரும்பிச் சென்றன.