districts

சாலை வசதி கோரி ஆட்சியரிடம் மனு

டிச.2 - திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் திங்களன்று மாவட்ட  ஆட்சியர் பிரதீப் குமார் தலை மையில் நடந்தது.

 இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்ட  பொருளாளர் இளங்கோ வன் ஆட்சியரிடம் கொடுத்த  மனுவில் கூறியிருந்ததாவது:  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் அந்த நல்லூர் ஒன்றியம், உத்தமர் சிலீ ஊராட்சி வடக்கு தெரு வில் உள்ள குறுக்கு சாலைப் பகுதிகளில் தொகுப்பு  வீடு கட்டி பலர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் வீடுகளுக்கு வீட்டு  வரி, குடிநீர் இணைப்பு கட்ட ணம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் வசிக்கக் கூடிய பகுதிகளுக்கு இதுவரை சாலை அமைத்து தர வில்லை. ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் ஊராட்சி மன்றச் செயலாளரிடம் மனு கொடுத்தும் இதுவரை சாலை அமைத்து தர வில்லை.  எனவே தாங்கள், அவர்கள் இப்பகுதி மக்க ளின் அடிப்படை தேவை களில் ஒன்றான சாலை வசதி ஏற்படுத்தித் தர  வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மற்றும்  கிராம மக்கள் உடனிருந்தனர்.

சொத்தை அபகரிக்க முயற்சி

வசாயிகள் சங்க உப்பிலி யபுரம் ஒன்றிய தலைவர்  வெங்கடாசலம் கோட்டாட்சி யரிடம் கொடுத்த மனுவில், “நான் உப்பிலியபுரம் ஒன்றி யத்தில் எனக்குச் சொந்தமான  வீடு மற்றும் நிலத்தில் வசித்து வருகிறேன். என்னு டன் எனது சகோதரி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்கள் என்னை மிரட்டி எனது வீட்டில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டு எனது சொத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.  இதுகுறித்து உப்பிலிய புரம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் கொடுத் தேன். போலீசார் புகார் மீது எந்தவித விசாரணையும் செய்யாமல், நீதிமன்றத் திற்கு செல்லச் சொல்லி அனுப்பி விட்டனர்.

எனவே தாங்கள் இதில் தலையிட்டு காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டிருந்தார். கோட்டாட்சியரிடம் மனுவை கொடுத்த போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செய லாளர் நடராஜன் உட னிருந்தார்.