தஞ்சாவூர், டிச.18 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி முத்து நாயகன் தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் சூர்யா புகழேந்தி தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத் தில், ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், “ஆலடிக்குமுளை ஊராட்சி முத்துநாயகன் தோட்டம் பகுதி யில், நாங்கள் 80 குடும்பத்தினர் கடந்த பல வருடங்களாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் குடி யிருந்து வருகிறோம். நாங்கள் அனைவரும் வீட்டு வரி, குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வரி என அனைத்தையும் அரசுக்கு செலுத்தி வருகிறோம். இப்போதும் அந்த இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் ஒன்றிய, மாநில அரசு வழங்கும் இலவச திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கு, அந்த இடத்திற்கான பட்டா இருந்தால்தான் வீடு வழங்குவோம் என ஊராட்சி மன்றத்தில் கூறி விட்டனர். இதனால் குடியிருக்க முறை யான வீடு இல்லாமல் மழை மற்றும் புயல் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளா கிறோம். நாங்கள் கூரை வீட்டில்தான் வசித்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் அரசு விதிகளுக்குட் பட்டு, எங்களுக்கு அதே இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளனர். மனுவின் நகல், பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆல டிக்குமுளை ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.