districts

img

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு மனு

திருச்சிராப்பள்ளி, நவ.20 - திருச்சியில் திங்களன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், சிபிஎம் அபி ஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் கொடுத்த மனுவில் கூறி யிருந்ததாவது: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர், கிராப்பட்டி, ராமச் சந்திராநகர், செட்டியப்பட்டி, கே.கே.நகர், ராஜமாணிக்க பிள்ளைத் தெரு, ஓலையூர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு திட்டத்தின்கீழ் அந்தந்த பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகள்  கட்டித்தர வேண்டும். திருச்சி மேற்கு தொகுதி பஞ்சப்பூர் மற்றும் பிராட்டியூர் பகுதி களில் உள்ள புறம்போக்கு  நிலத்தில் பல தலைமுறை களாக வசிக்கும் மக்க ளுக்கு வீட்டு மனைப் பட்டா  வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்  கூறியிருந்தனர்.