districts

img

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதியைப் பெற்றுத் தந்தது முதல்வர் ஸ்டாலின்தான்

புதுக்கோட்டை, மே 30-

    நாட்டின் மூத்த வழக்குரைஞர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி நிரந்தர அனுமதி யைப் பெற்றுத் தந்தது முதல்வர் ஸ்டா லின்தான் என்றார் திமுக முதன்மைச் செய லரும், மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு.

    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் பேரவை சார்பில் ஜூன் 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறு வதையொட்டி, திங்கள்கிழமை நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்  பேசுகையில், “இப்போது யார் யாரோ  ஜல்லிக்கட்டு நாயகர்கள் என்கிறார்கள். உண்மையில் நாட்டின் மூத்த வழக்குரை ஞர்களை வைத்து, தமிழ்நாடு அரசின்  சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதியைப் பெற்றுத் தந்தது முதல்வர் ஸ்டாலின்தான்” என்றார்.

    மாநில பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்  பி. மூர்த்தி பேசுகையில், “2008 ஆம் ஆண்டு  ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்தவுடன், அன்றைய நாளி லேயே சீராய்வு மனு தாக்கல் செய்வதற் கான ஏற்பாடுகளை அப்போதைய முதல்வர் கருணாநிதி மேற்கொண்டார். சில நாட்க ளிலேயே, ஏற்கெனவே தடை செய்த நீதி பதிகள் அமர்விலேயே, மீண்டும் தடையை விலக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அன்  றைக்கு கருணாநிதி தொடங்கி வைத்த வெற்றியை, இப்போது உச்சநீதிமன்றத்தில் அவரது மகன் ஸ்டாலின் உறுதி செய்து முடித்திருக்கிறார்” என்றார்.

    கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், “உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் வழக்கு வந்தபோதில் இருந்தே ஒவ்வொரு நாளும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த  வழக்குரைஞர்களுடன் முதல்வர் ஸ்டா லின் ஆலோசனை நடத்தினார்” என்றார்.  மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், “தமிழின் பாரம்பரி யத்தை மீட்டெடுக்கும் வகையில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு அமைந்துள்ள நிலையில், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரின் கவ னத்தையும் ஈர்க்கும் வகையில் இந்தப் பாராட்டு விழா அமையும்” எனக் குறிப் பிட்டார்.

   கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவையின்  தலைவர் பி.ராஜசேகரன் உட்பட மாநிலம்  முழுவதும் இருந்து வந்திருந்த ஜல்லிக் கட்டுப் பேரவையினர், ஆர்வலர்கள் பேசி னர். வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே.  செல்லப்பாண்டியன், எம்.எம். அப்துல்லா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் வை.முத்து ராஜா, முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, நகர திமுக செயலர் ஆ.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.