தஞ்சாவூர், பிப்.9 - தஞ்சாவூர் வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில், புதிய துணைவேந்தராக முனைவர் வெ.இராமச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய துணைவேந்தர் முனைவர் வெ.இராமச்சந்திரன் இளநிலை பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் தொழில் நுட்பக் கழகத்தில் படித்தவர். அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தினை பெற்றவர். 36 வருடங்களுக்கு மேலாக கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக வும், நாகலாந்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.