பேராவூரணி, பிப்.8- முதலமைச்சர் கோப் பைக்கான கைப்பந்துப் போட்டியில், மாநில அள வில் விளையாட தேர்வு செய் யப்பட்ட, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூரில் அண்மை யில் நடைபெற்ற முதல மைச்சர் கோப்பைக்கான கைப் பந்து போட்டி நடைபெற்றது. இதில், 19 வயதுக்கு உட் பட்டோர் பிரிவில் மாணவி தீபிகா தலைமையிலான பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி யினர் கைப்பந்து போட்டி யில் மாவட்ட அளவில் முத லிடம் பிடித்தனர். இதன் மூலம் மாநில அள விலான போட்டிக்கு விளை யாட தேர்ச்சி பெற்றுள்ளனர். தீபிகா தலைமையிலான கைப்பந்து அணிக்கும், பயிற்சி அளித்த பயிற்சியா ளர்கள் நீலகண்டன், பாரதி தாசன், அருண் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி ஆகியோருக்கும் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரியர்கள் பாரா ட்டி வாழ்த்து தெரிவித்தனர்.