பேராவூரணி, ஏப்.20-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் ஒரே அரசு மருத்துவமனையாக, பேராவூரணி பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், நவீன உபகரணங்களுடன் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்து பேசினார்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேராவூரணி அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கும், சுகாதாரத் துறை அமைச் சருக்கும் பேராவூரணி தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.