districts

img

20 ஆண்டுகளாக அவதிப்பட்ட மக்கள் சிபிஎம் தொடர் போராட்டத்தால் ஆணைக்குளம் கிராம மயானத்திற்கு தண்ணீர் தொட்டி அமைப்பு

மதுரை, மே 3-  

   மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாலங்குடி ஊராட்சி ஆணைக்குளம் கிராமத்தில் பட்டியலின மக்கள்  ஏராளமானோர் வசித்து வருகின்றனர் . இந்த  கிராமத்தில் உள்ள  மயானத்தில் சுமார்  20 ஆண்டுகாலமாக  தண்ணீர் வசதி இல்லா மல் பட்டியலின மக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் கொண்டுவரும் நிலை இருந்தது. இங்கிருந்த அடிபம்பு குழாயும் பல ஆண்டுகளுக்கு முன்பே பழுதடைந்துவிட்டது.  

   இதைத்தொடர்ந்து மயானத்திற்கு போர்வெல் அமைத்துத்தரக் கோரியும்,  தண்ணீர் தொட்டி கட்டித் தர கோரியும் கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வாடிப்பட்டி ஒன்றியக்குழு சார்பில் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது.  அதன் பிறகு சாலை மறியல் போராட்டத்திற்கு தயா ரானபோது, அதிகாரிகளால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து  வலி யுறுத்தப்பட்டது.  

  இந்நிலையில் கோரிக்கையை நிறை வேற்றாத அரசு அதிகாரிகளைக் கண்டித்து  மீண்டும் கடந்த மார்ச் மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு பதாகைகள் வெளியிடப்பட்டது.

  இதனைத்தொடர்ந்து ஆணைக்குளம் ஊராட்சி பட்டியலின மக்கள் பயன்படும் வகை யில் 15 ஆவது நிதி குழு மானியம் 2022-2023ஆம் ஆண்டு நிதியில் சுமார் ரூ.2லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.  

மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி

  அந்த கிராமமக்கள் அனைவரும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கட்சி தோழர் களுக்கும்   கண்ணீர் மல்க நன்றியை  தெரி வித்தனர்.