districts

img

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தரங்கம்பாடி வட்டம், மாணிக்கபங்கு கிராமம், ஆணைக்கோயில் வடக்குத் தெருவைச் சேர்ந்த கலைமணி த/பெ.நாகரத்தினம் என்பவருக்கு குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கறவை மாடு வாங்குவதற்கு தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.30000 -க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திங்களன்று வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோ.அர.நரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

;