மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தரங்கம்பாடி வட்டம், மாணிக்கபங்கு கிராமம், ஆணைக்கோயில் வடக்குத் தெருவைச் சேர்ந்த கலைமணி த/பெ.நாகரத்தினம் என்பவருக்கு குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கறவை மாடு வாங்குவதற்கு தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.30000 -க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திங்களன்று வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோ.அர.நரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.