districts

img

எரிவாயு சிலிண்டருக்கு முழு தொகையை வழங்குக!

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  பெரம்பலூர், ஏப்.19- பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

   ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மேனகா தலைமை வகித்தார். நிர்வாகிகள் மல்லிகா, விஜயலட்சுமி, ஜெயந்தி, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் மணிமேகலை, சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டின், மாவட்டச் செயலாளர் தமிழரசி, மாவட்டப் பொருளாளர் சுமதி ஆகியோர் விளக்கிப் பேசினர்.  

   மயிலாடுதுறை

   மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பேபி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் லதா முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் மாரியப்பன், செயலாளர் ராமானுஜம், அங்கன்வாடி ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் சுகுணா, வள்ளி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

   ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டருக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.