districts

img

கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்குக திருவிடைமருதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,  ஜூன் 23-

     கோட்டூர் அம்பிகா சர்க் கரை ஆலை தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆலைத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவிடைமருதூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்திற்கு கரும்பு விவசாயி கள் சங்க மாநிலச் செயலா ளர் காசிநாதன் தலைமை வகித்தார்.  

    தஞ்சாவூர் மாவட்டம் கோட்டூர் அம்பிகா சர்க்கரை  ஆலை தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய  நிலுவைத் தொகையை வட்டி யுடன் வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையை அரசுட மையாக்க வேண்டும். சர்க்கரை ஆலையின் சொத்து மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து ஒரு தலை பட்சமாக செயல்படும் திவால் தீர்ப்பாய நடவடிக் கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

     தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு  வெட்டு ஆட்கள் மற்றும்  கரும்பு வாகன உரிமையா ளர்களுக்கு உரிய நிலுவைத் தொகையினை வட்டியுடன் வழங்கிட வேண்டும். ஆலையை கார்ப்பரேட் அதிபருடன் இணைந்து சாராய ஆலையாக மாற்றா மல் அரசே ஏற்று நடத்த  வேண்டும். நிலமில்லா ஏழை  கூலித் தொழிலாளிகள் பெயரில் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடியாக வங்கியில் வாங்கிய பெருங் கடனை ரத்து செய்து, மத்திய குற்ற புலனாய்வுத் துறை விசாரணை மேற் கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகள் பெயரில் உள்ள வங்கி கடன்கள் முழு வதையும் தள்ளுபடி செய்திட வேண்டும்.  

    சர்க்கரை ஆலையில் பணியாற்றி, திவால் தீர்ப்பாய நடவடிக்கையால் 2019 டிசம்பர் 18 அன்று முதல் வேலை இழப்பு ஏற்பட்ட தொழிலாளர்களையும், பணி யாளர்களையும் வயது மூப்பு  காரணம் காட்டாமல் அரசே  பணியமர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்தனர்.