districts

img

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை

பொன்னமராவதி பேரூராட்சி அம்மன் கோவில் வீதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். இதில் இழுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் ஜெயபாரதி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், ஒன்றிய பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி, நகரச் செயலாளர் அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.