தஞ்சாவூர், மார்ச் 19- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காட்டில், தியாகி வாட்டாகுடி இரணி யன் சகோதரி மகனும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினருமான மறைந்த ஆர்.பெரியசாமி படத்திறப்பு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. படத்திறப்புக்கு பட்டுக்கோட்டை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினரும், மாநிலக் குழு உறுப்பின ருமான எம்.சின்னதுரை படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் மூத்த தோழர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.கலைச் செல்வி, மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, பொது வுடமை இயக்கத் தோழர் பாரதிமோகன், ரெ. ஞானசூரியன் மற்றும் தோழர் ஆர்.பெரிய சாமி குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.