districts

img

பட்டுக்கோட்டை பிறந்தநாள் கலை இலக்கிய இரவு

பட்டுக்கோட்டை, ஏப்.15-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் 94-ஆவது பிறந்த நாள் விழா, 42-ஆவது கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை,  மாலை தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் பட்டுக்கோட்டை கிளை சார்பில் நடைபெற்றது.  

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் மக்கள் கவிஞர் சிலைக்கு இரா.அண்ணாதுரை தலைமையில், ராஜாத்தி, பக்கிரிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

 பேருந்து நிலையத்திலிருந்து கலை இலக்கியப் பேரணியை க.செந்தில்குமார் தலைமையில் தமுஎகச மாவட்டத் தலைவர் கவிஞர் சா.ஜீவபாரதி தொடங்கி வைத்தார்.

கிளைத் தலைவர் முருக.சரவணன் தலைமை வகித்தார்.

கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை வரவேற்றார். மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் சிவ.பா.சிவச்சந்திரன், தமுஎகச மாவட்ட துணைத்தலைவர், ப.சத்தியநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் கலை இரவை தொடங்கி வைத்தார்.

 புதுகை பூபாளம் கலைக்குழுவின் நையாண்டி நிகழ்ச்சி, வேலூர் சாரல் கலைக்கழுவின் பறையாட்டம், கரகம், ஒயிலாட்டம், மான்கொம்பாட்டம், குச்சியாட்டம், கொண்டிக்குளம் வீரம் சிலம்ப குழுவினரின் சிலம்பாட்டம் நடைபெற்றது.

 தொடர்ந்து விட்னஸ் திரைக்குழுவினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் தீபக், கதாசிரியர் முத்துவேல், சமூக செயற்பாட்டாளர் செல்வா, தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

தமிழக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இயக்குநர் ல.சி.சந்தான மூர்த்தி பரிசுகள் வழங்கினார்.  பறக்கும் வெண் குதிரை நூல் அறிமுக நிகழ்ச்சி சரிதா பாலா தலைமையில் நடைபெற்றது. 8-ஆம் வகுப்பு மாணவர் பிரதீப் நூலை அறிமுகம் செய்து பேசினார்.

எழுத்தாளர் வன்மீ ஏற்புரையாற்றினார். கிளைப் பொருளாளர் கா.பக்கிரிசாமி நன்றி கூறினார்.  கலை இரவில் சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.