திருவாரூர், டிச.1 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலையை சரி செய்து தரக்கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். குடவாசல் அருகே எண்கண் கிராமத்தில் உள்ள பட்டகால் தெருவில் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இத்தெருவிற்கு வரும் பிரதான சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது பெய்துள்ள மழையினால் இச் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாண வர்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலை யில் உள்ளது இந்த சாலை. மேலும் மழைநீர் தேங்கியுள்ளதால் காய்ச்சல் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவசர காலத்தில் ஆம்பு லன்ஸை அழைத்தால் இச்சாலை வழியாக வர முடியாது. எனவே விரைந்து இச்சா லையை சீரமைத்து தர வேண்டும் எனக் கோரி, இப்பகுதி மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.