districts

img

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல வடசேரியில் குவிந்த பயணிகள் முண்டியடித்து இடம் பிடிக்க போட்டா போட்டி

நாகர்கோவில், ஜன.19- பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து  வெளியூர் செல்வதற்கு வடசேரி  பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் முண்டி யடித்து இடம் பிடிக்க போட்டி போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை தொடர்ந்து 6 நாட்கள்  வரை விடுமுறை கிடைத்தது. இதில்  சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பிற  மாவட்டங்களில் தங்கி வேலை பார்த்த வர்கள், படிப்பதற்கு சென்றவர்கள் தங்கள்  சொந்த ஊருக்கு பண்டிகை கொண்டாட வந்து சேர்ந்தனர். பண்டிகை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததால், தங்கள் வேலைக்கு செல்லவும், பள்ளி  கல்லூரிக்கு செல்லவும் சொந்த ஊரிலி ருந்து தங்கியிருக்கும் ஊர்களுக்குச் செல்ல  பயணிகள் தயாராகினர். இந்நிலையில் பேருந்து, ரயில், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், கிடைக்கும் பேருந்துகள், ரயில்களில் பயணிக்க வடசேரியில் உள்ள  கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம், ரயில் நிலை யங்களில் குவிந்தனர். பயணிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப மதியத்தில் இருந்தே அரசு போக்கு வரத்து நிறுவனம், அரசு விரைவு போக்கு வரத்து நிறவனங்கள் அதிக அளவில்  நாகர்கோவிலில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, பெங்களூர் உள்ளிட்ட மாநி லங்களுக்கும் பேருந்துகளை இயக்கினர். ஆனால் நேரம் ஆக ஆக, பயணிகளின் கூட்டமும் அதிகரித்து வந்தது. அதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும்  பேருந்துகளில் பயணிகள் முண்டி யடித்துக்கொண்டு ஏறி சீட் பிடிக்க போட்டி  போட்டனர். அதில் சீட் கிடைக்கப் பெறா தவர்கள் வேறு வழியின்றி நின்று கொண்டே  பயணத்தை தொடர முயன்றனர். அதன்படி,  பேருந்தகளில் பயணிகள் நிற்ககூட முடியாத அளவிற்கு ஏறினர். பல பேருந்துகள் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வட சேரியிலிருந்து புறப்பட்டுச் சென்றன. இதில் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் பொருட்களை அதிகம் வைத்திருந்தவர்கள் பேருந்துகளில் இடம் பிடிக்க முடியாமல் பரிதவித்தவாறு பல  மணி நேரம் காத்திருந்தனர். பாதுகாப்புக் காக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.  இது குறித்து போக்குவரத்து கழக அதி காரிகள் கூறியதாவது, பயணிகள் எண்ணிக் கைக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்துகளை இயக்குகிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பயணிகள் உள்ளதால் அவர்களுக்கும் பேருந்துகள் ஏற்பாடு செய்ய வழி வகைகள் செய்து வரு கிறோம். இங்கு வந்த அனைத்து பயணி களுக்கும் பேருந்துகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றனர்.