districts

img

மக்களுடன் முதல்வர் முகாமில் ரூ.1.15 கோடி நலத்திட்ட உதவி

கும்பகோணம், மார்ச் 8-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியங்களில் 5 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் உடையாளூர் அரசு உயர்நிலைப்பள்ளி, தில்லையம்பூர் சமுதாய கூடம், விளந்தகண்டம் அரசினர் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி, வாளபுரம் ஆலமன்குறிச்சி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் அம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்களில் 32 குழுவினருக்கு ரூ.1 கோடியே 3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளையும், 6 குழுக்களுக்கு ரூ.13 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதிகளையும் ஆக மொத்தம் 1 கோடியே 17 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் ஹிருத்யா எஸ். விஜயன், முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர். செ. இராமலிங்கம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப. தமிழழகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.