திருச்சிராப்பள்ளி, டிச.15- திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவல கத்தில் நிர்வாக அதிகாரி யிடம், சிஐடியு ஸ்ரீரங்கம் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வியாழனன்று சிஐ டியு சார்பில் மனு அளிக்கப் பட்டது. இதுதொடர்பாக மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன் அளித்த மனுவில், ‘‘ஸ்ரீரங்கம் பகுதியில் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. குறிப்பாக ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவில், அம்மா மண்டபம், திருவானைக் கோவில், மாம்பழச்சாலை பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. மேலும் பல ஆண்டு களாக திருவானைக்காவல், தெப்பக்குளம், மாம்பழச் சாலை பகுதிகளில் தரைக் கடை நடத்தி பிழைத்து வரும் வியாபாரிகளை மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்ற வேண்டும் என மிரட்டுகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் 5வது வார்டு பகுதி யில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யாமல் அசுத்த மாக உள்ளது. அழகிரிபுரம் 3வது தெருவில் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும்’’ என கூறியிருந் தார். மாநகராட்சி அதிகாரி யிடம் மனுவை கொடுத்த போது சிஐடியு நிர்வாகிகள் ரகுபதி, கோவிந்தன், சுப்ர மணி, செந்தில், வெற்றி, முத்து உள்பட பலர் உடனி ருந்தனர். முன்னதாக மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வல மாக வந்த சிஐடியுவினர் மாந கராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமிட்டனர்.