districts

img

3 தங்கம், 2 வெண்கலம் வென்று பரணி வித்யாலயா மாணவி சாதனை

கரூர், ஜூன் 10 - தேசிய சாப்ட் டென்னிஸ்  போட்டிகளில், கரூர் பரணி வித்யாலயா சிபி எஸ்இ மாணவி யாழினி  ரவீந்திரன் 3 தங்கப் பதக் கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்.  21 ஆவது தேசிய விளை யாட்டுப் போட்டிகளில் சீனி யர் சாப்ட் டென்னிஸ் போட்டி அண்மையில்  பஞ்சாபில் நடைபெற்றது. இப்போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி 18 வய திற்குட்பட்டோர் பிரிவில், தமிழ்நாடு சார்பாக பங்கேற்று குழு பிரிவில் ஒரு தங்கப்  பதக்கமும், தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2 வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் சத்தீஸ்கரில் அண்மையில் நிறைவு பெற்ற SGFI 67 ஆவது தேசிய விளை யாட்டுப்  போட்டிகளில், சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவி யாழினி,  19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தனி நபர்  மற்றும் குழுப் பிரிவில் 2 தங்கப்பதக்கங்கள் வென்றார். தென் கொரியாவில் நடைபெறும்  சர்வதேச சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, தென் கொரியா இந்திய சாப்ட் டென்னிஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்காக 16.6.2024 அன்று தென் கொரியா செல்கிறார் மாணவி யாழினி. தேசிய அளவில் சாதனை படைத்து கரூ ருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யாழினினுக்கு பரணி வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.மோக னரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மா வதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். பரணிக் கல்விக் குழும முதன்மை முதல்வர்  முனைவர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியை கள் மாணவி யாழினியை பாராட்டினர்.