திருச்சிராப்பள்ளி, ஏப்.9- திருச்சிராப்பள்ளியில் வர்த்தக மையம் பணிகள் நிறைவடைந்து செயல் பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அணுகு சாலை கிடைக்காத தால் வர்த்த மையம் கட்டுவது நின்று போய்விட்டது. வர்த்தக மையத்திற்கு மாநில அரசு நிலம் ஒதுக்கி மூன்று ஆண்டுகள் ஆகி யும் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத் தில் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் ஒன்றிணைந்து திருச்சி ராப்பள்ளியில் வர்த்தக மையத்தை அமைப்பதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழ கத்தை (சிட்கோ) அணுகி நிலம் கேட்டது. இதற்காக 9.42 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சி டிரேட் சென்டர் பிரைவேட் லிமி டெட் எனப் பெயரிடப்பட்ட நிறுவன மும் உருவாக்கப்பட்டது. சுமார் 200 உறுப் பினர்கள் தலா ரூ.3 லட்சம் வழங்கி யுள்ளனர். அதன்பிறகு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.11 கோடி செலவில் வர்த்தக மையம் கட்டுவதற் கான வரைபடத்தை தயாரித்தது. சிட்கோ ரூ. 5 கோடி மானியமாக வழங்கி யது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமானப் பணியைத் தொடங்க அடிக்கல் நாட்டினார். இந்த நேரத்தில் திட்டம் முடிந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் பணிகள் தொடங்கவில்லை. இது குறித்து திருச்சிராப்பள்ளி வர்த்தக மையத்தின் தலைவர் ஆர். இளங்கோ, செயலாளர் எஸ்.கோபால கிருஷ்ணன் ஆகியோரை நமது செய்தி யாளர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, திருச்சிராப்பள்ளி வர்த்தக மையங்க ளில் 200 மையங்கள் அமைக்கப்படும். தற்போது 43 பேர் தயாராக உள்ளனர். வர்த்தக மையம் பிரதான சாலையி லிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தமிழக அரசு விரைவில் அணுகுசாலை அமைத்துக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். அணுகு சாலை பணி நிறைவடைந்தால் வர்த்தக மையம் வெகு விரைவில் உருவாகி விடும் என்றனர். தமிழ்நாடு அரசு தொழில்முனை வோரை ஊக்குவிக்க விரைவில் அவர் களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.