பாபநாசம், மார்ச் 8- பாபநாசம் உட்கோட்டம் காவல்துறை மற்றும் பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. பாபநாசத்தில் நடந்த விழாவில், வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சாசனத் தலைவி தில்லைநாயகி வரவேற்றார். காவல் ஆய்வாளர்கள் பாபநாசம் சகாய அன்பரசு, கபிஸ்தலம் மகாலெட்சுமி முன்னிலை வகித்தனர். இதில் பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் பங்கேற்றுறார். பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் அப்துல் கனி உரையாற்றினார். பாபநாசம் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், பிரபாகரன், முத்தமிழ்ச் செல்வம், வட்டாரத் தலைவர் கணேசன், வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சாசன செயலர் திலகவதி, பொருளாளர் வசந்தி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உஷா, முனைவர் மலர் கொடி, டாக்டர்கள் திலகவதி, டீன் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.