பாபநாசம், அக்.7 - பயணிகள் நலன் கருதி சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலை மீண்டும் பழைய நேரத்தி லேயே இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு பாப நாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அவர் அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் சென்னையி லிருந்து இரவு பயணத்திற்கு சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் (ரயில் எண். 16865) உழவன் விரைவு ரயிலை பயன் படுத்துகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு, கும்பகோ ணத்துக்கு அதிகாலை 4.57 மணிக்கும், பாபநாசத்துக்கு அதிகாலை 5.15 மணிக்கும் சென்றடைந்தது. இருப்பி னும் கடந்த அக்டோபர் 1 முதல் இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணி களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. புதிய கால அட்டவணையின்படி, அக்டோபர் 1 முதல் உழவன் விரைவு தொடர் வண்டி சென்னை எழும்பூரில் இருந்து 40 நிமிடங்கள் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படுகிறது.
இது கும்பகோணம் மற்றும் பாபநாசத்தை அசாதாரண நேரங்களில் முறையே அதி காலை 4.03 மற்றும் 4.17 மணிக்கு வந்த டைகிறது. ஆடுதுறையில் இறங்கும் பய ணிகள் அதிகாலை 3.51 மணிக்கு இறங்க வேண்டியிருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நேரங்களில் பாபநாசம், கும்ப கோணம், ஆடுதுறை ஆகிய இடங்களில் இறங்கும் பயணிகள் தங்கள் கிராமங்களுக்குச் செல்வதற்கு எந்த வொரு பொதுப் போக்குவரத்தையும் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். ரயில் பயணிகள் நல ஆர்வலர் களால் சேகரிக்கப்பட்ட ஆர்டிஐ தரவு களின்படி, உழவன் விரைவு தொடர் வண்டியில் பயணிக்கும், முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளில் 40 சத வீதம் பேர் பாபநாசம், கும்பகோணம் மற்றும் ஆடுதுறையில் இறங்கு கின்றனர். இந்த மூன்று நிலையங்களி லும் சராசரியாக 500 பயணிகள் இறங்குகின்றனர். மயிலாடுதுறை வரை உழவன் எக்ஸ்பிரஸ் செல்லும், அதே வழித்தடத் தில் இயக்கப்படும் மன்னார்குடி விரைவு ரயில் (ரயில் எண்.16179), இப்போது சென்னை எழும்பூரில் இருந்து உழ வன் எக்ஸ்பிரஸ் புறப்பட்ட இரவு 10.55 மணிக்கு புறப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகளின் நலன்கருதி, உழ வன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து மீண்டும் இரவு 10.55 மணிக்கு புறப்படும் நேரமாக மாற்றியமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.