பாபநாசம், மே 21-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரண்டு ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வு பண்டாரவாடையில் நடைபெற்றது. “மக்களின் கட்டளை செயல்களாய்” என்ற நூலை மக்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், வெளியிட்டார்.
முதல் பிரதியை தமிழக அரசின் தலைமைக் கொறடா செழியன், இரண்டாம் பிரதியை கும்பகோணம் ஜோதிமலை இறைதிருப்பணிக் கூட்டம் நிறுவனர் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமியும் பெற்றுக் கொண்டனர். நிகழ்விற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவ ரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமை வகித்தார்.
மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் ருசி மைதீன், மாவட்டப் பொருளாளர் பொகர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கலைச்செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் காதர் உசேன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்டனர். மனித நேய மக்கள் கட்சியின் தலை மைச் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிபாயி நன்றி கூறினார்.