districts

பாபநாசம் பேருந்து நிலையத்தை சீரமைக்கக் கோரிக்கை

பாபநாசம், மே 23-

      தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ஜமாபந்தி மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் 312 பேருக்கு இலவச வீட்டு மனைப்  பட்டா, மாற்றுத் திறனாளி ஓய்வூதியம், விதவை ஓய்வூதி யம், சாதிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  

      மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் வட்டாட் சியர் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார்  ராஜகிரி ஊராட்சிமன்ற உறுப்பினர் முபாரக் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.  

      ஜமாபந்தியில் கலந்துகொண்ட மக்கள், “பாபநாசம் பேருந்து நிலையத்தை அகலப்படுத்த வேண்டும். ஆறு,  வாய்க்காலைத் தூர் வார வேண்டும். வேளாண் சார்ந்த தொழில்களை உருவாக்க வேண்டும். பிர்காவிற்கு நில அளவையர் நியமிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.