தஞ்சாவூர், மே 18-
பட்டுக்கோட்டை வட்டம் சரபேந் திரராஜன் பட்டினம் ஊராட்சி, மனோரா சுற்றுலா தலத்தில் இயங்கும் பூஞ்சோலை தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக் குழு வின் உறுப்பினரான ஆர்.கலா ராணி என்பவர் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
மனுவில், ‘‘நாங்கள் 6 பேர் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக அரசால் எங்கள் குழு விற்கு வழங்கப்பட்ட மனோரா தஞ்சை தாரகைகள் நெய்தல் உண வகத்தில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தலா ரூ.3,500, அங்குள்ள படகு குழாமில் பணியாற்றி வரும் 3 பட கோட்டிகளுக்கு தலா ரூ.20,000 மாதச் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா வின் கணவர் முகமது அலி ஜின்னா என்பவர் கட்டுப்பாட்டில் படகு சவாரி நிர்வாகம், சிறுவர் பூங்கா வசூல், கேண்டீன் நிர்வாகம் உள்ளது. ஊராட்சி மன்றத்திலோ அல்லது அரசு நிர்வாகத்திலோ எந்த பொறுப்பிலும் இல்லாத இவரின் ஆதிக்க நடவடிக்கையால் நாங்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறோம்.
படகு சவாரி மூலம் கிடைக்கும் பெரும் வருமானத் தொகையை அவர் மோசடி செய்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. போலியான டோக்கன்களை சுற்றுலாப் பயணி களிடம் விநியோகித்து, அதன் மூலம் வருவாயை குறைத்துக் காட்டி அரசுக்கு இழப்பை ஏற் படுத்தி வருகிறார்.
படகு சவாரி சம்பந்தமாக நாங்கள் பதிவு செய்து வைத்தி ருந்த, வருமான பதிவேடுகளை, தீ வைத்து எரித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி சுய உதவிக் குழு உணவகத்தில் வரும் வருமானம், படகு சவாரி, சிறுவர் பூங்காவில் வரும் வருமானம் ஆகியவற்றை மோசடி செய்து அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருடைய குற்றங்களுக்கு துணை போகாத காரணத்தினால் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்.
அவரு டைய மோசடிக்கு ஒத்துழைக்க மறுத்ததால் இரண்டு பெண் குழந்தைகளின் தாயான கலா ராணி என்ற என்னையும், மாற்றுத் திறனாளியான கவிதா என்ற பெண்ணையும், விதவைப் பெண் ணான புனிதா ஆகிய மூவரையும் உணவக கேண்டின் வேலையில் இருந்து நீக்கிவிட்டார். நாங்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். குறைந்த சம்பளத்தில் குடும்ப கஷ்டங்களுக் காக பணியாற்றி வந்த நாங்கள் தற்போது வேலை இல்லாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வரு கின்றோம்.
மனோரா சுற்றுலா தலத்தில் நடைபெறும் வசூல் மோசடியை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண் டும். தவறுக்கு உடந்தையாக செயல்படாததால் எங்களுக்கு மீண் டும் வேலை வழங்க வேண்டும்’’ கூறப்பட்டுள்ளது.
மனுவின் நகல் மாவட்ட ஆட்சி யர், சுற்றுலாத்துறை அமைச்சர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், பட்டுக்கோட்டை வருவாய் கோட் டாட்சியர், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர், பொருளாதார குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு ஆய்வா ளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.