districts

img

அரசுப் பள்ளியில் ஓவியப் போட்டி  

மயிலாடுதுறை, ஜன.30- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாண வர்களுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் மற்றும் பள்ளி சார்பில் ‘இயற்கையை காப்போம்’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.  இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன் பரிசு மற்றும்  சான்றிதழ்களை வழங்கினார். தலைமை ஆசிரியர், பெற் றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், அண்ணாமலை பல்க லைக்கழக வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

;