தேனி, ஜூன் 28-
நாடாளுமன்ற தேர்தல் பயன்பாட்டிற்காக நெல்லை, குமரி மாவட்டங்களிலிருந்துகட்டுப்பாடு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள் தேனிக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 180 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 490 வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இயந்திரங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்துமின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும்நடைமுறை களை பின்பற்றிஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் முன்னிலையில் வைக்கும் பணிகள் நடை பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியா ளர் (பொது) சிந்து, தேர்தல் வட்டாட்சியர் செல்வி.சுகந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.