districts

img

தமுஎகச கலை இலக்கிய இரவு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளிப்பு

நாகப்பட்டினம்/திருவாரூர், ஜூன் 11-

      நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் கலை  இலக்கிய இரவு நிகழ்வு எழுச்சிகர மாக நடைபெற்றது.

     ஆண்டுதோறும் நடைபெறும் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி வேதாரண்யம் வட்டக்கிளை சார்பில் 16 ஆவது ஆண்டாக கிளைத் தலைவர் தேவகி மைந் தன் தலைமையில் நடைபெற்றது.

     ராசாசி பூங்காவில் நடை பெற்ற விழாவில், கிளைச் செயலா ளர் ஆ.வீரமணி வரவேற்று பேசி னார். முன்னதாக வேதாரண்யம் பேருந்து நிலையத்திலிருந்து கலை இலக்கிய பேரணி தொடங்கி, வழியில், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர், தந்தை பெரியார், சர்தார் வேத ரத்தினம், தியாகி வைரப்பன் ஆகி யோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.எஸ்.தென்னரசு வாழ்த்துரை வழங்கினார். மாநிலத் துணைச் செயலாளர் மருதுபாரதி தொடக்க  உரையாற்றினார். தமுஎகச-வின் ஐம்பெரும் ஆளுமைகளுக்கு மாநில துணைப் பொதுச் செய லாளர் இரா.உமா, மாவட்டத் தலை வர் கவிஞர் ஆவராணி ஆனந்தன்,  மாவட்டச் செயலாளர் ஆதி.உதய குமார், மாநிலக் குழு உறுப்பினர்  ப.பாலசுந்தரம், ஆ.நடராஜன் உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செய்தனர்.

    புதுகை பூபாளம் கலைக் குழு, புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழு, திண்டுக்கல் சக்தி போர்பறைக்குழு, லிம்போ கேசவன் நெருப்பு நடனம், கரி காலனின் ராவண முறையீடு, காட்டு ரோஜா கலை குழுவின் கும்மியாட்டம், நாத்திகனின் மந்திரமா தந்திரமா, கரகம் காவடி, பாட்டும் பரதமும், சிலம்பாட் டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றன.  

   தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், டாணாக் காரன் திரைப்பட இயக்குநர் தமிழ ரசன் ஆகியோர் சிறப்பு உரை யாற்றினர். நிகழ்ச்சியை மாவட்ட  துணைச் செயலாளர் சி.பி. செல்வம் தொகுத்து வழங்கி னார். கிளை பொருளாளர் சிவ. இராமலிங்கம் நன்றி உரையாற்றி னார். இந்நிகழ்ச்சியை ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டுகளித்தனர்.  

திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட புதிய ரயில் நிலையத்திலிருந்து சமூக நல்லிணக்க கலை இயக்க பேரணியானது தொடங்கி முக்கிய  வீதிகள் வழியாக மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், பறை இசையுடன் திருவாரூர் கீழ வீதியில் அமைக்கப்பட்ட கலை இலக்கிய மேடையை வந்தடைந்தது.

   புதுவை எதிரொலி கலைக் குழுவின் பறையிசையுடன் கலை  இலக்கிய இரவு நிகழ்ச்சி தொடங் கியது. இதில் மக்கள் இசை பாடல்கள் கரிசல்குயில் கிருஷ்ண குமார், பொன்.மகாலிங்கம், ஆலங்குடி மோகனா, வடக்குப் பனையூர் ஜெயந்தி ஆகியோ ரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. இதனை தொடர்ந்து தமிழக  அரசின் கலைமாமணி விருது பெற்ற தப்பலாம்புலியூர் ஜெக நாதன் குழுவினரின் காவடியாட் டம், புலியாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நோக்க உரை யினை எழுத்தாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான ஸ்டாலின் சரவணன் எடுத்துரைத் தார். எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன்  எழுதிய “கோசிமின்” நூல் வெளி யீடு, கவிஞர் இராஹரி சுஜித் எழுதிய “நான் எழுதிய கடிதாசி” கவிதை நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.

    இந்த புத்தக வெளி யீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பு பாராட்டு பெற்றவர் களுக்கு திருவாரூர் சட்டமன்ற  உறுப்பினர் பூண்டி.கலைவாணன்  பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார். தமுஎகச மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ஓசை.காளிதாசன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.

   மாவட்ட தலைவர் மு.சௌந்த ரராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன், மாவட்ட பொரு ளாளர்  செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த கலை இலக்கிய இரவு, புதுவை பூபாலன் கலைக் குழு வினரின் நாட்டு நடப்பு நையாண்டி  நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.