திருச்சிராப்பள்ளி, ஏப்.18-
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அவுட்சோர்சிங் மூலம் ஓட்டுநர்கள் நியமிப்பதைக் கைவிட வேண்டும், பணியில் உள்ள தொழிலாளர்களின் பென்சன் உரி மையை மறுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி பணிமனை முன் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் சட கோபான் தலைமை வகித்தார்.
கும்பகோணம்- அசூர் சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு அரசு போக்கு வரத்து தொழிலாளர் (சிஐடியு) சங்க பணிமனைத் தலைவர் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மத்திய சங்கத் தலை வர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். ஏராள மான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.