districts

img

தாராசுரம் குடியிருப்புப் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு

கும்பகோணம் செப்13 கும்பகோணம் மாநக ராட்சி தாராசுரம் கோசி மணி  நகர் ரயிலடி தெருவில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கோசிமணி நக ருக்குச் செல்வதற்கு ஒரு வழிப் பாதை மட்டுமே உள் ளது இந்த வழியில் இரவு நேரங்களில் ரோட்டில் மது அருந்திவிட்டு அடிக்கடி மது  பிரியர்களால் தகராறு ஏற்படு கிறது  இந்த நிலையில் தஞ்சா வூர் அரண்மனை தேவஸ்தா னத்திற்கு சொந்தமான இடம் கோசி மணி நகரில் உள்ளது அந்த இடத்தில் மீன் மார்க் கெட் அமைப்பதற்கு கும்ப கோணம் மாநகராட்சி நிர்வா கம் ஏற்பாடு செய்தது. அங்கு  மீன் வியாபாரம் செய்வதற்கு  மீன் வியாபாரிகளும் வந்து மீன் கடை அமைத்து வியா பாரத்தில் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதி யைச் சேர்ந்த சுமார் 100-க்கும்  மேற்பட்டவர்கள் மீன் மார்க்  கெட் இங்கு தேவை இல்லை  எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்து வந்த கும்ப கோணம் தாலுகா காவல்  துறையினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டததைத் தொட ர்ந்து மக்கள் கலைந்து சென்ற னர். இதுகுறித்து அந்தப்  பகுதி மக்கள் தெரிவித்ததா வது “தாராசுரம் பேருந்து  நிலையத்தில் செயல்பட்டு  வந்த மீன் மார்க்கெட் அங்கி ருந்து அப்புறப்படுத்தப் பட்டு, குடியிருப்புப் பகுதி யான கோசி மணி நகரில் அமைக்கக் கூடாது. இது  தொடர்பாக மனு தயார் செய்து தமிழக முதல்வர் மற்றும் மாநகராட்சி ஆணை யர் உள்ளிட்ட அனைத்து அரசு  அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றனர்.