திருச்சிராப்பள்ளி,ஜன,5- திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியதிற்குட்பட் டது மாதவப் பெருமாள் கோவில் ஊராட்சி. இந்த ஊராட்சியில் நொச்சி யம், குமரகுடி , ஸ்ரீரங்கராயபுரம், மான் பிடிமங்கலம், கூடப்பள்ளி, இந்திரா நகர், புதுப்பாலம் உள்ளிட்ட பகுதிக ளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாதவப்பெருமாள் கோவில் ஊராட்சி திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத்திட்டத்தை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் உயரும். காலி மனைகளுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே மாதவ பெருமாள் கோவில் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வலியுறுத்தி சனிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் மக்கள் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் மறி யலில் ஈடுபட்டனர். மறியலுக்கு கட்சியின் மண்ணச்ச நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிர மணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் சுப்பிரமணி, நல்லையன்,செல்வம், கார்த்தி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறையினர் நடத் திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் தற்கா லிகமாக கைவிடப்பட்டது. விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் இதேபோன்று பிச்சாண்டார் கோவில் ஊராட்சியை திருச்சி மாநக ராட்சியோடு இணைப்பதை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் ஞாயிறன்று நம்பர் 1 டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர்கள் ராஜகோபால்,தமிழன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டசெயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி. விவ சாயிகள் சங்க மாவட்ட துணைத் தலை வர் முருகேசன் ஆகியோர் பேசினர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.