districts

img

ரோட்டரி சார்பில் நூலகம் திறப்பு

அறந்தாங்கி, மே 8-

   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த தொழுவங்காடு கிராமத்தில் அறந்தாங்கி ‘தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப்’ சார்பில் ரூ.5 லட்சம்  மதிப்பீட்டில் தொழுவங்காடு கிராமத்தில் அமைக் கப்பட்டுள்ள நூலகத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

   நிகழ்விற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜ. ஜெரால்டு தலைமை வகித்தார். வருங்கால ரோட்டரி  ஆளுநர் ராஜா கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் மருத்துவர்தெட்சிணாமூர்த்தி வரவேற்றார். அப்துல் கபார்கான் நன்றி கூறினார்.

   இதில், வருவாய்  கோட்டாட்சியர் சொர்ணராஜ், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் சுமதிசுரேஷ். படிப்பகம் இயக்குநர் அல்லிராணிபாலாஜி, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் க.சுரேஷ்குமார், தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.சரவணன், செயலாளர் கே.கணேசன், பொருளாளர் எஸ்.கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.