districts

img

முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு: 3 ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு

அறந்தாங்கி, செப். 26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் பங்க ளிப்புடன், இயந்திரவியல் துறை, கணினியி யல் துறை, வணிகவியல் துறை, வகுப்ப றைகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன் களை வெளிக் கொணரும் வகையில் மூன்று  ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ச. குமார் தலைமை வகித்தார். பச்சலூர் நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வீ.ஜோதி மணி, பொறியாளர் (புதுக்கோட்டை) வி.செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஆகியோர் திறன்மிகு  வகுப்பறைகளை திறந்து வைத்து மாண வர்களுக்கு அர்ப்பணித்தனர்.  இதில் கல்லூரி முன்னாள் மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், துறைத் தலை வர்கள், நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.