districts

சாலை விபத்தில் ஒருவர் பலி

தஞ்சாவூர், ஏப்.28-  

    திருச்சி அருகே உள்ள குண்டூர் சத்யா நகரைச் சேர்ந்த வர் செந்தில்குமார் (57). வழக்குரைஞரான இவர் அன்பா லயம் என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி அதன் இயக்குநராக இருந்து வந்தார்.

    வியாழனன்று செந்தில்குமார் திருச்சியில் இருந்து  தஞ்சைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந் தார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் எதிரில் வந்த போது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் மீது செந்தில் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.  

   இதில் சாலையை கடக்க முயன்றவரும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வழக்குரைஞர் செந்தில்குமாரும் படுகாயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், செந்தில்குமார்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடையாளம் தெரியாத  மற்றொரு நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.