கோவை, மே 12- கேரள மக்களால் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்றான ”அமானுல்லாவின் ஞாபகங்கள்” என்ற புத்தக் கத்தை, எழுத்தாளர் சுனில்லால் ”அமானுல்லாவின் ஞாப கங்கள் பாலைச் சுனை” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கோவை மாவட்டக் குழுவின் சார்பில் நடைபெறும், இலக்கிய சந்திப்பு 249 நிகழ்ச்சி, தாமஸ் கிளப்பில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கவிஞர் சே.விவேகானந்தன் தலைமை தாங்கினார். வெ.பெ.தர்மலிங்கம் வரவேற்றார். கேரளத்தில் வெளியான ”அமானுல்லாவின் ஞாபகங் கள்” என்ற நினைவுக்குறிப்பு புத்தகம் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையான மிக முக்கியமான மலையாள தொகுப்பா கும். இது கேரளா மக்களால் அதிகம் வாசிக்கப்பட்ட புத்த கங்களில் ஒன்று. அதனை பாரதி புத்தகாலயம் தமிழில் எழுத்தாளர் சுனில் மொழி பெயர்ப்பில் ”அமானுல்லாவின் ஞாபகங்கள் பாலைச் சுனை” என்ற பெயரில் வெளியிட் டுள்ளது. இந்நூலினை எழுத்தாளர் மு.ஆனந்தன் வெளியிட, தமுஎகச மாவட்டத் தலைவர் தி. மணி, பிரிதன்ஸ் ராஜ்கு மார், கி.ராமதாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கவிஞர் க.அ.ரேணுகாதேவி வாழ்த்துரையும், தமுஎகச மாவட்டச் செயலாளர் கரீம் ஆகியோர் நூலினை அறிமுகம் செய்தும் பேசினர். பின்னர் ’உறவும் பிரிவும்’ என்ற நாவலினை முனைவர் ராம பரிமளம் அறிமுகம் செய்ய, கவிஞர் பொன்சிங் ஏற்பு ரையாற்றினார். கவிஞர் நிலா கதிரவன் நன்றி கூறினார். நிகழ்வில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.