மயிலாடுதுறை, டிச.29- ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென் னையில் நடத்திய போராட் டத்தில் தாக்குதல் நடத்தி வாலிபர் சங்கத்தினரை கைது செய்ததைக் கண்டித் தும், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மயி லாடுதுறை மாவட்டத்தில் 3 இடங்களில் புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கிட் டப்பா அங்காடி முன்பு மாவட்ட பொருளாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் குமரேசன், சீர் காழி ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி ஒன்றியம், இலுப்பூர் கடைவீதியில் ஒன் றிய தலைவர் பவுல் சத்திய ராஜ் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாநி லச் செயற்குழு உறுப்பினர் என்.ஆனந்தி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாணவர் சங்க ஒன்றிய செயலாளர் பிர வீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் கடைவீதியில் ஒன் றியச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் வெற்றி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மணி பாரதி உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
திருவாரூர்
திருவாரூர் ரயில் நிலை யம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேச வராஜ் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி கடைவீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் தலைமை வகித்தார். நன்னி லம் ஒன்றியம் சார்பாக ஆண்டிப்பந்தல் கடை வீதி யில் நடைபெற்ற போராட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.பாலா தலைமை வகித்தார். குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலைய அருகே நடைபெற்ற போராட் டத்திற்கு ஒன்றிய செயலா ளர் கே.பகத்சிங் தலைமை வகித்தார். கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.ஜெய் கிஷ் தலைமை வகித்தார்.