தஞ்சாவூர், ஜன.31- குடிமனைப் பட்டா, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட சேதுபாவாசத்திரம் மக்க ளின் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பிப்.13 அன்று உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம், சேதுபாவா சத்திரத்தில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் பி.பெரி யண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், மூத்த தோழர் வீ.கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதி களில், குடிமனைப் பட்டா இல்லாத ஆயிரக் கணக்கானோர் தொடர்ந்து மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பள்ளத்தூர், மறவன் வயல், செந்தலைவயல், சேதுபாவா சத்திரம், கழுமங்குடா, அழகியநாயகிபுரம், இரண்டாம் புலிக்காடு, கொரட்டூர், கீழக்கழனி வாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காத்திருக்கும் நிலையில் உள்ளது. எனவே, வருவாய்த் துறையினர் தகுதி உள்ளவர் களுக்கு குடிமனைப் பட்டாவை தாமத மின்றி வழங்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் மீனவர்களின் படகுகள் செல்லும் வகையில், முகத்துவா ரங்களை தூர்வாரி உடனடியாக சீரமைக்க வேண்டும். சீகன்காடு பகுதியில் விவசாயி களின் பாசன வசதிக்காக மும்முனை மின்சா ரம் கேட்டு, அதற்காக பணம் கட்டியும், மின்சாரம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவும் வழங்கியது. ஆனால், நீண்ட காலமாக தனிநபர் எதிர்ப்பு காரணமாக விவ சாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், காவல்துறை ஒத்துழைப்புடன் மின்வாரியம் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள பொதுமக்களின் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்.13 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.