districts

img

“கவிஞர்களைப் போற்றுவோம்” நிகழ்ச்சி

புதுக்கோட்டை, நவ.4 - புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் “கவிஞர்களைப் போற்றுவோம்” நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிறன்று நடைபெற்றது.  நிகழ்விற்கு, தமிழ்ச் சங்க பொருளாளர் மு.கருப்பையா தலைமை வகித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன  முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கவிஞர் மு.பால சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் ஆலங்குடி வெள்ளைச்சாமி, கு.ம.திருப்பதி, மகா.சுந்தர், முருகபாரதி, சு. பீர்முகமது ஆகியோர் கவிதை வாசித்தனர். ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டில்  ‘கவிநயச் சுடர் விருது’ பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்தி அரு.மாணிக்கவேலு, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை  வழங்கிய கலை இளமணி பட்டம் பெற்ற  பீ.முகமது தய்யூப் ஆகியோர் பாராட்டப் பட்டனர். வாசகர் பேரவை செயலர் சா. விஸ்வநாதன், பேரா.சி.அய்யாவு உள்ளிட் டோர் பேசினர். கவிஞர் தங்கம்மூர்த்தி நிறை வுரையாற்றினார். முன்னதாக நேசன்மகதி வரவேற்க, இரா.ராஜநாராயணன் நன்றி கூறி னார்.