districts

img

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பேராவூரணியில் அஞ்சலி

தஞ்சாவூர், ஜூன் 7-  

     தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்ட  ரயில் பயனாளிகள் சங்கம் சார்பில் பேராவூ ரணி ரயில் நிலையம் எதிரில் ஓடிசா ரயில்  விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

    நிகழ்ச்சிக்கு ரயில் பயனாளிகள் சங்கத்  தலைவர் மெஞ்ஞானமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் பாரதி வை.நட ராஜன் முன்னிலை வகித்தார்.  

   ரயில் பயனாளிகள் சங்க நிர்வாகிகள் நாகையா, பழனிவேல், சுலைமான் மற்றும்  சமூக ஆர்வலர்கள் கார்கில் வினோத், சமத்  துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பேரை ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.