பொன்னமராவதி, ஜூலை 19 -
40 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தில் சடலத்தை புதைக்க விடாமல் தடுத்ததால், சட லத்தை சாலையில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட் டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ளது பி.உசிலம் பட்டி, ஏனமேடு. இப்பகுதியில் 40 ஆண்டுகளாக அனைத்து மக்களும் பயன்படுத்தக் கூடிய பொது சுடுகாடு உள்ளது. அதை தனிநபர் ஆக்கிர மித்து கம்பி வேலி அமைக்க முற் பட்டார். அப்போதே, உடனடியாக நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை மீட்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், சிபிஎம் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட் டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் ஏனமேட்டை சேர்ந்த அழகர்சாமி (65) என்பவர் செவ்வா யன்று (ஜூலை 18)இறந்துவிட்டார். இவ ரது உடலை அடக்கம் செய்வதற்காக, அந்த ஊர் மக்கள் சுடுகாட்டிற்கு எடுத் துச் சென்றனர். அப்போது, பட்டா இ டத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தடுத்துள்ளனர். இதுகுறித்து பொன்னமராவதி தாசில் தார் பிரகாஷ், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில், ‘பட்டா இடத்தில் அடக்கம் செய்ய வேண்டாம்; அரசு இடம் தரு கிறோம்; அந்த இடத்தில் அடக்கம் செய்யுங்கள்’ என வலியுறுத்தினார். இதனை ஏற்க முடியாது; பல ஆண்டு களாக நடைமுறையில் உள்ள இடத்தில் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். முறைகேடாக சுடு காட்டிற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கோரி இறந்தவரின் உடலை பொன்னம ராவதி-பூலாங்குறிச்சி சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடத்தி னர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்டிஓ (பொ) திருஞானம் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சனைக்குரிய இடம் அருகே அழகர்சாமியின் உடலை அடக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
மேற்கண்ட இடத்தை இரண்டு தரப்பும் பயன்படுத்தாமல் இருக்க, சமாதான கூட்டத்தில் நட வடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார். இதை ஏற்று சடலத்தை அடக் கம் செய்தனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாரா யணன், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சலோமி, ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.
மேலும் புதன்கிழமை, சிபிஎம் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இடத்தை உரிமை கொண்டாடும் ராம சாமி தரப்பு என அனைவரும் பங்கேற்ற சமாதான கூட்டம் ஆர்.டி.ஓ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், “திருமயம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் வரும் தீர்ப்பை ஏற்று நடந்து கொள்வது, அதுவரை மேற் கண்ட இடத்தை இருவரும் பயன் படுத்தாமல் இருக்க வேண்டும்” என முடிவு செய்யப்பட்டது.