கும்பகோணம், ஏப்.12- கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும் நெசவாளர் அரங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவருமான கே.எல்.ராமாச்சாரி காலமானார். இவர் கட்சி கிளைச் செயலாளர் சு.சுதாகரின் தந்தையாவார். அன்னாரது மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன், அருள்அரசன், சிஐ டியு துணைத் தலைவர் ஜீவபாரதி, மாநகரச் செயலா ளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்த அஞ்சலி செலுத்தினர்.